“அழியாத” ஒரு ராஜ்யம்
அதிகாரம் 10
“அழியாத” ஒரு ராஜ்யம்
யெகோவாவின் அரசாட்சியை வேண்டாமெனத் தள்ளி, அதற்குப் பதிலாக, தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள முயன்றதில் மனிதர் சந்தோஷத்தைக் கண்டடையவில்லை என்ற உண்மையை ஒவ்வொரு நாளும் உலக சம்பவங்கள் உறுத்திக் காட்டுகின்றன. மனித அரசாங்க ஒழுங்குமுறை எதுவும் பாரபட்சமில்லாமல் மனிதவர்க்கம் முழுவதற்கும் நன்மைகளைக் கொண்டுவரவில்லை. மனிதர் தங்கள் விஞ்ஞான அறிவை முன் என்றுமில்லாத அளவுக்கு விருத்திசெய்திருக்கிறபோதிலும், பாவத்தை வேரோடு அழித்துப்போடவும், நோயை அடக்கி வெல்லவும் மரணத்துக்கு முடிவைக் கொண்டுவரவும் முடியவில்லை, தங்கள் குடிமக்களில் ஒரே ஒருவனுக்குங்கூட அவற்றைச் செய்ய முடியவில்லை. அதற்கு நேர் மாறாக, தேசங்கள் புதியவையும் மேலுமதிக பயங்கரமுமான போராயுதங்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. கடுங்குற்ற வன்முறை பெருகுகிறது தொழில் நுட்ப வாணிகத் துறையும் பேராசையும் அறியாமையும் ஒன்று சேர்ந்து நிலத்தையும் நீரையும் ஆகாயத்தையும் அசுத்தப்படுத்துகின்றன. வானளாவும் வண்ணம் விரைவில் உயரும் பணவீக்கமும் வேலையில்லாமையும் வாழ்க்கையின் இன்றிமையாதத் தேவைகளை அடைவதைப் பலருக்கு மிகக் கடினமாக்கிக் கொண்டிருக்கின்றன, இவற்றிலிருந்து வெளியேறும் வழிக்காக மக்கள் போராடுகின்றனர்.—பிர. 8:9.
2 இதற்குப் பதில் என்ன? ஜெபிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்த கடவுளுடைய ராஜ்யமேயாகும். (மத். 6:9, 10) அது கொண்டுவரப்போகிற விடுதலை இப்பொழுது வெகு சமீபித்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!
3 ஏற்கெனவே பொ.ச. 1914 முதற்கொண்டு கடவுளுடைய ராஜ்யம் இயேசு கிறிஸ்துவின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. a தீர்க்கதரிசனக்காட்சியில் கண்ட சம்பவங்கள், பொ.ச. 1914-ம் ஆண்டில், பரலோகத்தில் உண்மையில் நடந்தேறின. “நீண்ட ஆயுசுள்ளவரான” யெகோவா தேவன், மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும்” கொடுத்தார், “அவருடைய ஆளுகை நீங்காத நித்திய ஆளுகை, அவருடைய ராஜ்யம் அழியாதது.” (தானி. 7:13, 14, தி.மொ.) இந்த ராஜ்யத்தைக் கருவியாகக் கொண்டே கடவுள், பரதீஸில் நம்முடைய முதல் மனித பெற்றோரை வைத்தபோது தாம் நோக்கங்கொண்டிருந்த எண்ணற்ற நற்காரியங்களை நீதியை நேசிப்பவர்கள் அனுபவித்து மகிழக்கூடும்படி செய்வார்.
4 இந்த ராஜ்யத்தின் உண்மைத்தவறாதக் குடிமக்கள் இந்த அரசாங்கத்தின் அமைப்பிலும் இயக்கத்திலும் கூர்ந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். அது இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறது, எதிர்காலத்தில் அது எதை நிறைவேற்றும், தங்களிடம் அது எதிர்பார்ப்பது என்ன, ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். அதை அவர்கள் நுட்பமாய் ஆராய்ந்து பார்க்கிறார்கள், அப்படிச் செய்கையில், அதற்கான அவர்களுடைய மதித்துணர்வு வளருகிறது, அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்படி அவர்கள் தங்களைத் தகுதிபெறச் செய்கிறார்கள்.—சங். 48:12, 13.
இருதயத்தைத் தூண்டிவிடும் கூர்ந்த ஆராய்ச்சி
5 இப்படிப்பட்ட ஆராய்ச்சி வெளிப்படுத்துகிற முதல் காரியங்களில் ஒன்று, இந்த மேசியானிய ராஜ்யம் யெகோவாவின் சொந்த அரசாட்சியின் ஒரு வெளிக்காட்டு என்பதே. தம்முடைய குமாரனுக்கு, “ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும்” கொடுத்தவர் அவரே. இவ்வாறு, இந்த ராஜ்யம் ஆளத் தொடங்கின பின்பு, பரலோகத்திலிருந்து குரல்கள் பொருத்தமாகவே பின்வருமாறு கூறின: “உலக அரசாட்சி நமது ஆண்டவருக்கும் [யெகோவா தேவனுக்கும்] அவர் கிறிஸ்துவுக்கும் கைவசமாயிற்று, அவர் [யெகோவா] யுகாயுகங்களாய் வெளி. 11:15, தி.மொ.) ஆகவே இந்த ராஜ்யத்தையும் அதன் நிறைவேற்றத்தையும் பற்றி நாம் கவனிக்கும் எல்லாம் நம்மை யெகோவாவிடம்தானே மேலும் நெருங்கும்படி கவர்ந்திழுக்கிறது. அவருடைய அரசாட்சிக்கு நம்மை என்றும் கீழ்ப்படுத்தும்படியான ஆவலை நம்மில் வளர்க்கிறது.
அரசாளுவார்.” (6 யெகோவா இயேசு கிறிஸ்துவைத் தமக்குப் பிரதிநிதி அரசராக சிங்காசனத்தில் வைத்திருப்பது எவ்வளவு நல்லது. பூமியையும் மனிதனையும் உண்டாக்கக் கடவுள் உபயோகித்தத் தலைசிறந்த வேலையாளனாக, இயேசு, நம்மில் எவரும் அறிவதைப் பார்க்கிலும் நன்றாக நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார். மேலும், மனித சரித்திரத்தின் தொடக்கத்திலிருந்தே ‘மனுபுத்திரரின் மீதிருந்தத் தம்முடைய பாசத்தை’ மெய்ப்பித்துக் காட்டினார். (நீதி. 8:30, 31; கொலோ. 1:15-17) அந்த அன்பு அவ்வளவு மிகுந்திருந்ததனால் அவர்தாமே நேராக பூமிக்கு வந்து மனிதருக்காகத் தம்முடைய உயிரை மீட்கும் விலைக்கிரயமாக அளித்தார். இவ்வாறு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாவதற்குரிய வழியையும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வாய்ப்பையும் அவர் நமக்குக் கிடைக்கக் கூடியதாக்கினார்.—மத். 20:28.
7 இது உறுதியாய் நிலைத்திருக்கும் அரசாங்கம். யெகோவாதாமே மரணத்துக்கு ஆளாகிறவரல்ல என்ற இந்த உண்மையால் இதன் நிலைத்திருக்கும் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. (எபி. 1:12; சங். 146:3-5, 10) கடவுள் அரசாட்சி பொறுப்பை ஒப்படைத்திருக்கிற இயேசு கிறிஸ்து, மனித அரசர்களுக்கு நேர்மாறாக, சாவாமையுடையவர். (ரோமர் 6:9; 1 தீமோ. 6:15, 16) “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” எடுக்கப்பட்ட கடவுளுடைய உண்மைத்தவறா ஊழியர்களாகிய 1,44,000 மற்றவர்கள் பரலோக சிங்காசனங்களில் கிறிஸ்துவுடன் சேர்ந்திருப்பார்கள். இவர்களுக்குங்கூட சாவாமையுடைய ஜீவன் கொடுக்கப்படுகிறது. (வெளி. 5:9, 10; 1 கொரி. 15:42-44, 53) ஏற்கெனவே இவர்களில் மிகப் பெரும்பான்மையர் பரலோகங்களில் இருக்கிறார்கள், பூமியில் இன்னும் இருக்கிற இவர்களின் மீதிபேர் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாக இருக்கிறார்கள், இது அந்த ராஜ்யத்தின் அக்கறைகளை இங்கே உண்மையுடன் முன்னேற்றுவிக்கிறது.—மத். 24:45-47, NW.
8 இப்பொழுது சீக்கிரத்தில், யெகோவா குறித்திருக்கும் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் அவருடைய படைகள் இந்தப் பூமியைச் சுத்திகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர். தாங்களே தெரிந்து கொண்டதன் காரணமாகக் கடவுளை அறியாதிருக்கிற மனிதரையும், அவருடைய அரசாட்சியை நன்றியோடு ஏற்றுக்கொள்ள மறுத்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவர் செய்கிற அன்புள்ள ஏற்பாடுகளை அவமதிப்போடு பாவித்து நடக்கிறவர்களையும் அவர்கள் என்றுமிராதபடி அழித்து விடுவார்கள். (2 தெச. 1:6-9) இது யெகோவாவின் நாளாக இருக்கும், சர்வலோகப் பேரரசராக அவர் நியாயம் நிரூபிக்கப்படுவதற்கு வெகுகாலமாக காத்திருக்கப்பட்ட காலம்.
9 இந்த உலகத்தின் காணக்கூடாதப் பொல்லாத அதிபதியால் பயன்படுத்தி நடத்தப்பட்ட பொய் மதம் முழுவதும், மேலும் எல்லா மனித அரசாங்கங்களும் அவற்றின் சேனைகளும் என்றுமாக அழித்தொழிக்கப்படும். தன்னலத்தையே கருதி, நேர்மையற்ற, ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இவ்வுலகத்தின் மரணத்தில் அறுப்புண்டுபோவார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமியின் குடிமக்களோடு தொடர்பில்லாதபடி விலக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பத்திரமாய்க் கட்டுப்படுத்தப்பட்டிருப்பார்கள். நீதியை நேசிக்கிற யாவருக்கும் இது எப்பேர்ப்பட்ட விடுதலையாயிருக்கும்!—வெளி. 18:21, 14; 19:11-16, 19-21; 20:1, 2.
அதன் நோக்கங்கள்—எப்படி நிறைவேற்றப்படும்
10 இந்தப் பூமிக்குக் கடவுள் தொடக்கத்தில் கொண்டிருந்த நோக்கத்தை மேசியானிய ராஜ்யம் முழுமையாய் நிறைவேற்றும். (ஆதி. 2:8, 9, 15; 1:28) இந்நாள் வரையில் மனிதன் அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டிருக்கிறான். என்றபோதிலும், “வரப்போகிற குடியிருக்கப்பட்ட பூமி” மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பழைய ஒழுங்கு முறையின் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தைத் தப்பிப் பிழைக்கிற யாவரும் அரசர் கிறிஸ்துவின் கீழ் ஒன்றுபட்டு உழைப்பார்கள், இந்தப் பூமி ஒரு பூகோள பரதீஸாகும்படி அவர் கட்டளையிடுகிற எதையும் மகிழ்ச்சியுடன் செய்வார்கள். (எபி. 2:5-9) எல்லா மனிதரும் தங்கள் கைகளின் உழைப்பை அனுபவித்து மகிழுவார்கள், பூமியின் மிகுதியான விளைச்சலிலிருந்து முழுமையாய் நன்மை அடைவார்கள்.—சங். 72:1, 7, 8, 16-19; ஏசாயா 65:21, 22-ஐ ஒத்துப் பாருங்கள்.
11 ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டபோது அவர்கள் பரிபூரணராக இருந்தார்கள், பூமி அவர்களுடைய சந்ததியாரால் நிரப்பப்பட்டு, அவர்கள் எல்லாரும் மனதிலும் உடலிலும் பரிபூரணத்தை அனுபவித்து மகிழவேண்டுமென்பதே கடவுளுடைய நோக்கமாக இருந்தது. இந்த ராஜ்ய ஆட்சியின் கீழ் அந்த நோக்கம் மகிமையாய் உண்மையில் நிறைவேறும். இது நிறைவேற பாவத்தின் எல்லா விளைவுகளும் நீக்கப்பட வேண்டும், இதைச் செய்வதற்கு கிறிஸ்து அரசராக மாத்திரமல்ல பிரதான ஆசாரியராகவும் சேவிக்கிறார். தம்முடைய சொந்த மனித உயிர்ப் பலியின் பாவநிவிர்த்தி செய்யும் விலைமதிப்பிலிருந்து தம்முடைய கீழ்ப்படிதலுள்ள பிரஜைகள் நன்மை அடைவதற்கு அவர் பொறுமையுடன் உதவி செய்வார். குருடரின் கண்கள் திறக்கப்படும். செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். வயோதிபத்தால் அல்லது நோயால் உருக்குலைக்கப்பட்ட மாம்சம் சிறுபிள்ளையின் மாம்சத்தைப் பார்க்கிலும் புதுமை ததும்பும் ஆரோக்கியமுள்ளதாகும். சுகமடையாமல் நீடித்துள்ள பலவீனங்கள் விலகி உடல் உறுதியுடன் துடிக்கும் ஆரோக்கியத்துக்கு இடமளிக்கும். “வியாதிபட்டிருக்கிறேன்” என்று சொல்ல ஒருவருக்கும் காரணமிராத அந்த நாள் வரும், ஏனென்றால் கடவுளுக்குப் பயப்படுகிற மனிதர் பாவபாரத்திலிருந்தும் அதன் துன்ப விளைவுகளிலிருந்தும் விடுதலையாக்கப்படுவர்.—ஏசாயா 33:22, 24; 35:5, 6; யோபு 33:25; லூக்கா 13:11-13.
12 என்றபோதிலும், பரிபூரணத்தை அடைவதில், ஆரோக்கியமான உடலையும் மனதையும் கொண்டிருப்பதைவிட மிக அதிகம் உட்பட்டிருக்கிறது. மனிதன் ‘கடவுளுடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியேயும்’ உண்டாக்கப்பட்டபடியால், அவன், யெகோவாவின் சுபாவ பண்புகளைச் சரியானபடி பிரதிபலிப்பதும் அதில் அடங்கியிருக்கிறது. (ஆதி. 1:26) இதைச் செய்வதற்கு மிகுந்தக் கல்வி தேவைப்படும். இது “நீதி வாசமாயிருக்கும்” புதிய ஒழுங்காகும், ஆகவே, தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னறிவித்தபடி, “பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (2 பேதுரு 3:13; ஏசா. 26:9) இந்தப் பண்பு—சகல தேசங்களின் ஜனங்களுக்கிடையிலும், நெருங்கிய கூட்டாளிகளுக்குள்ளும், அவரவருடைய குடும்பத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடன்தானேயும்—சமாதானத்துக்கு வழிநடத்துகிறது. (ஏசாயா 32:17; சங். 85:10-13) நீதியைக் கற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு அவர்களைக் குறித்த கடவுளுடைய சித்தம் படிப்படியாய்க் கற்பிக்கப்படும் யெகோவாவின் வழிகளை நேசிக்கும் அன்பு அவர்களுடைய இருதயங்களில் ஆழமாய் வேர்க்கொள்கையில், அவற்றைத் தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்பற்றுவார்கள். ‘என் பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’, என்று பரிபூரண மனிதனாகிய இயேசு சொல்ல முடிந்தது. (யோவான் 8:29) மனிதவர்க்கம் முழுவதும் அவ்வாறு செய்கையில் வாழ்க்கை எவ்வளவு இன்ப அனுபவமாயிருக்கும்!
ஏற்கெனவே தெளிவாகத் தெரிகிற நிறைவேற்றங்கள்
13 ஏற்கெனவே, மனதை ஆழ்ந்து கவரும் இந்த ராஜ்யத்தின் நிறைவேற்றங்கள் விசுவாசக் கண்களையுடைய ஆட்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பின்வரும் கேள்விகளும் வேதவசன இடக்குறிப்புகளும் இவற்றில் சிலவற்றைப் பற்றி உங்களுக்கு நினைப்பூட்டும், மேலும் இந்த ராஜ்யத்தின் குடிமக்கள் யாவரும் இப்பொழுது செய்யக்கூடிய மற்றும் செய்து கொண்டிருக்க வேண்டிய காரியங்களைப் பற்றியும் நினைப்பூட்டும்:
யாருக்கு எதிராக அரசர் முதல் நடவடிக்கை எடுத்தார், அதன் பயன் என்ன? (வெளி. 12:7-10, 12)
கிறிஸ்து சிங்காசனத்திலேற்றப்பட்ட பின்பு எந்த வகுப்பின் கடைசி உறுப்பினரைக் கூட்டிச் சேர்ப்பதற்கு உடனடியான கவனம் செலுத்தப்பட்டது? (மத். 24:31; வெளி. 7:1-4)
இயேசு சிங்காசனத்தில் அமர்ந்த பின்பு பொல்லாதவர்களை அழிப்பதற்கு முன்பாக வேறு எந்த வேலையைத் தாம் செய்வாரென்று மத்தேயு 25:31-33-ல் முன்னறிவித்தார்?
இந்த வேலை எப்படி நிறைவேற்றப்படுகிறது? இதில் யார் பங்கெடுக்கிறார்கள்? (மத். 24:14; சங். 110:3; வெளி. 14:6, 7)
அரசியல் மற்றும் மத எதிரிகள் ஏன் அதை நிறுத்த முடியவில்லை? (அப். 5:38, 39; சகரியா 4:6)
ஏசா. 2:4; 1 கொரி. 6:9-11)
கல்விப் பயிற்றுவிக்கும் இந்த வேலையை நிறைவேற்றுவதன் பயனாக, ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படியும் ஆட்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்கெனவே நடந்தேறியிருக்கின்றன? (இந்த ராஜ்யத்தின் நீடித்து நிலைத்திருக்கும் தன்மை
14 சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அபிஸ்ஸூக்குள்ளாக்கிய பின்பு இயேசு கிறிஸ்து தம்முடைய உடன் சுதந்தரவாளிகளாகிய 1,44,000 பேருடன் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வார். (வெளி. 20:6) அக்காலத்தின்போது மனிதவர்க்கம் பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்படும். யெகோவாவை எதிர்க்கும் எல்லா அரசாங்கமும் அதிகாரமும் வல்லமையும் நீக்கப்படும். இதை நிறைவேற்றி முடித்தப்பிறகு, “கடவுளே எல்லாருக்கும் எல்லாமாக இருக்கும்படி,” இயேசு ராஜ்யத்தைத் திரும்பத் தம்முடைய தகப்பனிடம் ஒப்புக்கொடுத்து விடுவார்.—1 கொரி. 15:24, 28, NW.
15 ஆகவே இந்தப் பூமியின் சம்பந்தமாக இயேசுவினுடைய பதவிநிலை மாறும், இருந்தபோதிலும், அவருடைய ஆளுகை “நீங்காத நித்திய ஆளுகை” அவருடைய ராஜ்யம் “அழியாதது.” (தானி. 7:14, தி.மொ.) எந்தக் கருத்தில்? வேறுபட்ட நோக்கங்களையுடைய மற்றவர்களின் பொறுப்பில் இந்த ஆளும் அதிகாரம் கடத்தப்படாது என்ற கருத்தில். மேலும் இந்த ராஜ்யத்தின் நிறைவேற்றங்கள் ‘ஒருபோதும் அழியாது’ யெகோவாவின் பெயரையும் இந்தப் பூமியைக் குறித்த அவருடைய நோக்கத்தையும் நியாயம் நிரூபிக்க இந்த ராஜ்யம் செய்வது என்றும் நிலைத்திருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” புத்தகம், பக்கங்கள் 144-157-ஐ பாருங்கள்.
மறு கலந்தாலோசிப்பு
● ஏன் கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு ஒரே பரிகாரம்? இது எப்பொழுது ஆட்சி செய்ய தொடங்கினது?
● கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய எது உங்கள் இருதயத்தை முக்கியமாய்க் கவருகிறது, அது எதை நிறைவேற்றும்? ஏன்?
● ராஜ்யத்தின் என்ன நிறைவேற்றங்களை நாம் ஏற்கெனவே காண்கிறோம்? இவற்றில் நமக்கு இருக்கும் பங்கு என்ன?
[கேள்விகள்]
1, 2. (எ) உலக சம்பவங்களால் எந்த உண்மை ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தப்படுகிறது, எப்படி? (பி) இதற்கு ஒரே பரிகாரம் என்ன?
3. (எ) இந்த ராஜ்யத்தின் சம்பந்தமாக பொ.ச. 1914-ல் பரலோகத்தில் என்ன நடந்தது? (பி) அது ஏன் நமக்கு முக்கியமாயிருக்கிறது?
4. இந்த ராஜ்யத்தைப் பற்றிய எந்த நுட்பவிவரங்கள் நமக்கு கூர்ந்த அக்கறைக்குரியவை, ஏன்?
5. (எ) மேசியானிய ராஜ்யத்தின் மூலமாய் யாருடைய அரசாட்சி வெளிப்படுத்தப்படுகிறதுதென்று வேதவசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (பி) ஆகவே இந்த ராஜ்யத்தைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களால் எப்படிப் பாதிக்கப்படுகிறோம்?
6. இயேசு கிறிஸ்து யெகோவாவின் பிரதிநிதி அரசராக இருப்பது நமக்கு ஏன் முக்கிய அக்கறைக்குரியது?
7. (எ) எந்த மனிதனின் ஆட்சிக்கும் எதிர்மாறாக, இந்த அரசாங்கம் ஏன் நீடித்து நிலைத்திருக்கும்? (பி) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”க்கு இந்த அரசாங்கத்துடன் என்ன உறவு இருக்கிறது?
8, 9. (எ) எந்தப் பிரிவினையுண்டாக்கும், கெடுக்கும் செல்வாக்குகளை இந்த ராஜ்யம் ஒழித்துப் போடும்? (பி) ஆகவே, நாம் கடவுளுடைய ராஜ்யத்தின் சத்துருக்களாவதைத் தவிர்க்க வேண்டுமானால் எந்த அமைப்புகளிலும் நடவடிக்கைகளிலும் சிக்கிக்கொள்ளாதபடி தவிர்த்திருப்போம்?
10. (எ) இந்தப் பூமிக்காக யெகோவா கொண்டிருந்த நோக்கத்தை மேசியானிய ராஜ்யம் எப்படி நிறைவேற்றும்? (பி) பூமியில் அப்பொழுது வாழும் மக்களுக்கு இது எதைக் குறிக்கும்?
11. (எ) ராஜ்ய குடிமக்களுக்கு மனதிலும் உடலிலும் பரிபூரணம் எப்படிக் கொண்டுவரப்படும்? (பி) இதில் எதுவும் அடங்கியிருக்கும்
12. (எ) மனித பரிபூரணத்தை அடைவதற்கு வேறு எதுவும் தேவை? (பி) இதை எப்படி அடைவார்கள்? இதன் பலன் என்ன?
13. ராஜ்யத்தின் நிறைவேற்றங்களையும் ஆகவே நாம் செய்யவேண்டியதையும் விளக்கமாகத் தெரியும்படி செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள்.
14. (எ) கிறிஸ்து எவ்வளவு காலம் ஆட்சி செய்வார்? (பி) அந்தக் காலத்தின்போது என்ன நிறைவேற்றப்படும்?
15. இந்த ராஜ்யம் ‘ஒருபோதும் அழியாது’ என்பது எப்படி உண்மையாயிருக்கிறது?
[பக்கம் 84, 85-ன் படம்]
மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்