உங்களை அழைக்கிறோம்!
இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சி
சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2025
கட்டணமின்றி நடக்கும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் உங்களை வரவேற்கிறோம்
விசேஷ பைபிள் பேச்சு
“உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியுமா?”
உண்மைகளைப் பற்றியும் அதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதைப் பற்றியும் இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார் என்பதை இந்தப் பேச்சில் தெரிந்துகொள்ளுங்கள்.
இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சி
இந்த முக்கியமான நிகழ்ச்சியில், யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் நினைவுநாளை அனுசரிக்கிறார்கள். இதைச் செய்ய வேண்டுமென்று இயேசுவே கட்டளை கொடுத்திருக்கிறார்.—லூக்கா 22:19.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
யாரெல்லாம் வரலாம்?
எல்லாருமே வரலாம். உங்கள் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்.
இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு நேரத்துக்கு நடக்கும்?
விசேஷ பைபிள் பேச்சு அரை மணிநேரத்துக்கு இருக்கும். அதற்குப் பிறகு, பைபிளில் இருக்கும் ஒரு விஷயத்தின் அடிப்படையில் ஒரு மணிநேர கலந்தாலோசிப்பு இருக்கும்.
நினைவுநாள் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு நடக்கும்.
இந்த நிகழ்ச்சிகள் எங்கே நடக்கும்?
இதைத் தெரிந்துகொள்ள, மேலே இருக்கும் “நினைவுநாள் நிகழ்ச்சி நடக்கும் இடம்” அல்லது “விசேஷ பேச்சு கொடுக்கப்படும் இடம்” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இதில் கலந்துகொள்வதற்கு ஏதாவது கட்டணம் கட்ட வேண்டுமா?
இல்லை.
நிகழ்ச்சியில் பணம் வசூலிக்கப்படுமா?
இல்லை. யெகோவாவின் சாட்சிகள் எந்த நிகழ்ச்சிகளிலும் பணம் வசூலிப்பதில்லை.—மத்தேயு 10:8.
ஒரு குறிப்பிட்ட விதமான உடையைப் போட வேண்டுமா?
அப்படி எதுவும் இல்லை. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அடக்கமாகவும் மரியாதைக்குரிய விதத்திலும் உடை உடுத்துகிறார்கள்.
நினைவுநாள் நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாடல் மற்றும் ஜெபம் இருக்கும். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு ஊழியர் ஜெபம் செய்வார். பின்பு, பைபிள் அடிப்படையில் ஒரு பேச்சு கொடுக்கப்படும். இயேசுவின் மரணம் ஏன் ரொம்ப முக்கியம்... கடவுளும் இயேசுவும் நமக்காகச் செய்த விஷயங்களிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்... என்பதைப் பற்றி அந்தப் பேச்சில் சொல்லப்படும்.
இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
அடுத்து வரும் வருஷங்களில் நினைவுநாள் நிகழ்ச்சி எப்போது நடக்கும்?
2025: சனிக்கிழமை, ஏப்ரல் 12
2026: வியாழக்கிழமை, ஏப்ரல் 2
2027: திங்கள்கிழமை, மார்ச் 22
கூடுதலாகத் தெரிந்துகொள்ள, இந்த வீடியோக்களைப் பாருங்கள்.
இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள்
நினைவுநாள் நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்றும், இயேசுவின் மரணத்தால் நமக்கு எவ்வளவு அருமையான எதிர்காலம் கிடைக்கப்போகிறது என்றும் இதில் பாருங்கள்.
நம்முடைய பாவங்களுக்காகத்தான் இயேசு இறந்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஒரேவொரு மனிதனுடைய மரணத்தால் எப்படி லட்சக்கணக்கான மக்களுக்கு நன்மை கிடைக்கும்?
ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்?
நீங்களே பாருங்கள்.