பிரசங்கி 8:1-17

8  ஞானமுள்ளவனுக்கு நிகரானவன் யார்? பிரச்சினைக்குத் தீர்வு* தெரிந்தவன் யார்? ஒருவனுடைய ஞானம் அவனுடைய முகத்தைப் பிரகாசமாக்கும், அவனுடைய கடுகடுப்பான முகத்தைக்கூட சாந்தமாக்கும்.  நான் சொல்வது இதுதான்: “நீ கடவுளுக்குக் கொடுத்திருக்கும் உறுதிமொழியை+ மதித்து, ராஜாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.+  அவசரப்பட்டு அவர் முன்னாலிருந்து போய்விடாதே.+ கெட்ட காரியத்தைச் செய்வதில் பிடிவாதமாக இருக்காதே.+ அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.  ராஜா சொன்னால் சொன்னதுதான்.+ ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று யாரும் அவரிடம் கேட்க முடியாது.”  கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவனுக்கு எந்தக் கெடுதலும் வராது.+ சரியான நேரமும் வழிமுறையும்* ஞானமுள்ளவனின் இதயத்துக்குத் தெரியும்.+  மனுஷர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லா காரியத்துக்குமே ஒரு நேரமும் வழிமுறையும் உண்டு.+  என்ன நடக்கும் ஏது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும்போது, அது எப்படி நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும்?  உயிர்சக்தியை* கட்டுப்படுத்தவோ பிடித்து வைக்கவோ எந்த மனுஷனாலும் முடியாது. அதேபோல், சாவு நாளை மாற்றுகிற அதிகாரமும் யாருக்குமே கிடையாது.+ போர்வீரனுக்குப் போர்க்களத்தைவிட்டுப் போக எப்படி அனுமதி கிடைக்காதோ அப்படித்தான் அக்கிரமக்காரர்களையும் அக்கிரமம் தப்பிக்க விடாது.*  இதையெல்லாம் நான் பார்த்தேன். சூரியனுக்குக் கீழே நடக்கிற எல்லாவற்றையும் கவனித்தேன். இவ்வளவு காலமாக மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.+ 10  பரிசுத்த இடத்துக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்த பொல்லாதவர்கள் அடக்கம் செய்யப்பட்டதை நான் பார்த்தேன். அவர்கள் அக்கிரமம் செய்த நகரத்தில் சீக்கிரமாக மறக்கப்பட்டுப்போனார்கள்.+ இதுவும் வீண்தான். 11  கெட்ட காரியத்தைச் செய்தவனுக்கு உடனடியாகத் தண்டனை கிடைக்காததால்,+ மனுஷர்களின் இதயம் கெட்ட காரியங்களைச் செய்யத் துணிந்துவிடுகிறது.+ 12  பாவி ஒருவன் கெட்ட காரியங்களை நூறு தடவை செய்திருந்தும் ரொம்பக் காலம் வாழலாம். ஆனாலும், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத்தான் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே கடவுளுக்குப் பயந்து நடக்கிறார்கள்.+ 13  பொல்லாதவனுக்கு எதுவும் நல்லபடியாக நடக்காது.+ நிழல் போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடிக்காது.+ ஏனென்றால், அவன் கடவுளுக்குப் பயந்து நடப்பதே இல்லை. 14  இந்தப் பூமியில் வீணான* ஒரு காரியம் நடக்கிறது: நீதிமான்கள் பொல்லாதவர்களைப் போலவும்,+ பொல்லாதவர்கள் நீதிமான்களைப் போலவும் நடத்தப்படுகிறார்கள்.+ இதுவும் வீண்தான் என்று நான் சொல்கிறேன். 15  அதனால், என் சிபாரிசு இதுதான்: சந்தோஷமாக இருங்கள்.+ சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக இருப்பதைவிட சிறந்தது சூரியனுக்குக் கீழே வேறெதுவும் இல்லை. சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற வாழ்நாளில் கடினமாக வேலை செய்யும்போது சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 16  ஞானத்தைச் சம்பாதிக்கவும் இந்தப் பூமியில் நடக்கிற காரியங்களையெல்லாம் பார்க்கவும் நான் கவனம் செலுத்தினேன்.+ அதற்காக ராத்திரி பகலாக நான் தூங்காமல் இருந்தேன்.* 17  பிறகு, உண்மைக் கடவுள் செய்கிற எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பார்த்தேன். சூரியனுக்குக் கீழே நடக்கிற விஷயங்களை மனுஷர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன்.+ என்னதான் முயற்சி செய்தாலும், அவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவற்றைத் தெரிந்துகொள்கிற அளவுக்கு ஞானம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒரு விஷயத்துக்கு அர்த்தம்.”
வே.வா., “தீர்ப்பும்.”
வே.வா., “உயிர்மூச்சை; காற்றை.”
அல்லது, “அக்கிரமத்தால் காப்பாற்ற முடியாது.”
வே.வா., “விரக்தியடைய வைக்கும்.”
அல்லது, “மக்கள் ராத்திரி பகலாகத் தூங்காமல் இருப்பதைப் பார்த்தேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா