Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உம்முடைய ராஜ்யம் வருவதாக”​—லட்சக்கணக்கான மக்களின் ஜெபம்

“உம்முடைய ராஜ்யம் வருவதாக”​—லட்சக்கணக்கான மக்களின் ஜெபம்

கடவுளுடைய ராஜ்யம், அல்லது அரசாங்கம், வர வேண்டுமென்று எப்போதாவது நீங்கள் ஜெபம் செய்திருக்கிறீர்களா? பல நூற்றாண்டுகளாக, நிறைய பேர் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று பலமுறை ஜெபம் செய்திருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கத்துக்காக ஜெபம் செய்யச் சொல்லி இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார்.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு சொன்ன எல்லாவற்றையும் அவரைப் பின்பற்றியவர்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒருமுறை, “எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?” என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு அவர் நேரடியாகப் பதில் சொல்லாதது, அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம். (அப்போஸ்தலர் 1:6, 7) அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது எப்போது வரும் என்று நம்மாலும் தெரிந்துகொள்ள முடியாதா? அப்படி இல்லை!

காவற்கோபுரத்தின் இந்த இதழ், பின்வரும் கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுக்கும்:

  • கடவுளுடைய அரசாங்கம் நமக்கு ஏன் தேவை?

  • கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்?

  • கடவுளுடைய அரசாங்கம் பூமியை எப்போது ஆட்சி செய்யும்?

  • கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?

  • கடவுளுடைய அரசாங்கத்துக்கு நாம் ஏன் இப்போதே ஆதரவு கொடுக்க வேண்டும்?

  • கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?