Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்

யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்

சாலொமோனுக்கு அசாதாரண ஞானத்தை யெகோவா கொடுத்தார் (1ரா 10:1-3; w99 7/1 பக். 30 பாரா 6)

சாலொமோனுக்கு யெகோவா கொடுத்த ஞானத்தைப் பார்த்து சேபா தேசத்து ராணி அசந்துபோனாள் (1ரா 10:4, 5; w99 11/1 பக். 20 பாரா 6)

சாலொமோனை ராஜாவாக நியமித்ததற்காக யெகோவாவை சேபா தேசத்து ராணி புகழ்ந்தாள் (1ரா 10:6-9; w99 7/1 பக். 30 பாரா 7)

சேபா தேசத்து ராணியைப் போல நாமும் யெகோவா கொடுக்கிற ஞானத்தை ரொம்ப உயர்வாக நினைக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம்? ஒரு வழி, இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும், அவரைப் போல நடக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். (மத் 12:42; 1பே 2:21) இன்னொரு வழி, யெகோவா சொல்லிக்கொடுக்கிற ஞானமான விஷயங்களை ஊழியத்தில் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்.