Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 15

சந்தோஷமாக வாழ்வது எப்படி?

“வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட, அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.”

நீதிமொழிகள் 15:17

“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்.”

ஏசாயா 48:17

“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.”

மத்தேயு 5:3

“உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.”

மத்தேயு 22:39

“மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”

லூக்கா 6:31

“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”

லூக்கா 11:28

“ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.”

லூக்கா 12:15

“அதனால், நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.”

1 தீமோத்தேயு 6:8

“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”

அப்போஸ்தலர் 20:35