Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் வார்த்தை அழியாது

உங்கள் வார்த்தை அழியாது
  1. 1. தேவ ஊழியரே,

    வேதத்தை காத்தார்களே!

    உங்கள் மாபெயரையும்,

    ராஜ்ய நம்பிக்கையும்தானே

    நன்றி பொங்கிடவே

    எழுதி வைத்தார்களே!

    நாம் பயன் பெற்றிடவே!

    நம் பாதைக்கு வழி காட்டவே!

    உம் அன்பை ருசித்தே,

    உங்கள் அங்கீகாரம் பெற்றே,

    அன்பாய் தந்த பொன் போன்ற வார்த்தை

    பாதுகாத்து வைத்தார்களே!

    (பல்லவி)

    வானம் அழிந்தாலுமே,

    உங்கள் வார்த்தை அழியாதே!

    நீங்கள் தந்த செய்தி, தென்றல் காற்று போல

    அதை ஸ்வாசிப்பேனே என்றுமே!

  2. 2.ஓ, தீயிலே சுட்டெரித்தாலும்

    தடைகள் தாண்டுமே!

    உண்மையுள்ள உங்கள் மக்கள்

    விசுவாசம் காத்தார்களே!

    எதிரி தடைகள் போட்டாலும்

    உறுதியாக நின்றார்கள்!

    உயிரை தரவும் தயங்கவில்லையே

    உம் வார்த்தையைக் காத்திடவே!

    (பல்லவி)

    ஆம், இந்த வானம் அழிந்தாலுமே

    உங்கள் வார்த்தை அழியாதே!

    நீங்கள் தந்த செய்தி, தென்றல் காற்று போல

    அதை ஸ்வாசிப்பேனே என்றுமே!

  3. 3. வேத வார்த்தையில் நாம் பார்க்கின்றோமே,

    யெகோவா பெயரையே!

    என்றும் மங்கிடாதே,

    உங்கள் மாபெயரே!

    நாளும் போற்றி பாடுவோமே!

    (பல்லவி)

    வானம் அழிந்து போனாலும்

    உங்கள் வார்த்தை அழியாதே!

    நீங்கள் தந்த செய்தி, தென்றல் காற்று போல

    அதை ஸ்வாசிப்பேனே என்றுமே!

    என்றென்றுமே!