கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்—தைரியம்
ஏன் முக்கியம்?
-
பிரசங்க வேலை செய்வதற்குத் தைரியம் தேவை.—அப் 5:27-29, 41, 42
-
மிகுந்த உபத்திரவத்தின்போது நம் தைரியம் சோதிக்கப்படும்.—மத் 24:15-21
-
மனித பயத்தால் விபரீதம்தான் ஏற்படும்.—எரே 38:17-20; 39:4-7
எப்படி வளர்த்துக்கொள்வது?
-
யெகோவா தன் மக்களை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தியானித்துப் பாருங்கள்.—யாத் 14:13
-
யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்.—சங் 118:6
உண்மையாக இருப்பதை கெடுக்கும் விஷயங்கள்—மனித பயம் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஊழியத்தில் நமக்கு ஏன் தைரியம் தேவை?
-
நீதிமொழிகள் 29:25-ல் சொல்லப்பட்டிருக்கும் வித்தியாசப்பட்ட இரண்டு குறிப்புகள் என்ன?
-
நாம் ஏன் இப்போது தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்?