Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குரு

குரு

இவர் கடவுளின் பிரதிநிதியாக மக்களுக்குச் சேவை செய்தார்; கடவுளைப் பற்றியும் கடவுளின் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்குக் கற்பித்தார். கடவுள் முன்னால் மக்களின் பிரதிநிதியாகவும் சேவை செய்தார்; அவர்களுக்காகப் பலிகளைச் செலுத்தினார், பரிந்து பேசினார், வேண்டுதல் செய்தார். திருச்சட்டம் கொடுக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு குடும்பத் தலைவரும் அந்தந்த குடும்பத்துக்குக் குருவாகச் சேவை செய்தார். திருச்சட்டத்தின்படி, லேவியரான ஆரோனின் வம்சத்து ஆண்கள் குருமார்களாகச் சேவை செய்தார்கள். லேவியர்களான மற்ற ஆண்கள் அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்தார்கள். புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தபோது, கடவுளுடைய இஸ்ரவேலர்கள் குருமார் தேசமாக ஆனார்கள், இயேசு கிறிஸ்து அவர்களுடைய தலைமைக் குருவானார்.—யாத் 28:41; எபி 9:24; வெளி 5:10.