போரால் நாசமடைந்திருக்கும் இடத்தை இரண்டு சிறுவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

AspctStyle/stock.adobe.com

இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்

இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்

 பூமியிலிருந்தபோது, இயேசு மக்கள்மேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார்; தன்னுடைய உயிரையே அவர்களுக்காகக் கொடுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 15:13) மக்கள்மேல் இருக்கும் அன்பை இயேசு மறுபடியும் நிரூபிப்பார். சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.’—சங்கீதம் 46:9.

 இயேசு என்ன செய்யப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது:

  •   “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12-14.

 இயேசு நமக்காக செய்த எல்லாவற்றுக்காகவும், இனிமேல் செய்யப்போகிற எல்லாவற்றுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? அதற்கு ஒரு வழி, இயேசு பிரசங்கித்த “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” நாம் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (லூக்கா 4:43) “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையைப் படித்து பாருங்கள்.