பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 12

பஸ்கா​—⁠கிறிஸ்தவர்கள் முக்கியமாக நினைக்கும் ஒன்று

பஸ்கா​—⁠கிறிஸ்தவர்கள் முக்கியமாக நினைக்கும் ஒன்று

12:5-7, 12, 13, 24-27

இஸ்ரவேலர்கள் பத்தாம் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் யெகோவா கொடுத்த கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது அவசியமாக இருந்தது. (யாத் 12:28) நிசான் 14 அன்று ராத்திரி, அவர்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளில் இருக்கும்படி சொல்லப்பட்டது. எந்தக் குறையும் இல்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாக் குட்டியையோ அவர்கள் வெட்ட வேண்டியிருந்தது. அதன் இரத்தத்தைத் தங்கள் வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களிலும் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டியிருந்தது. பிறகு, இறைச்சி முழுவதையும் நெருப்பில் வாட்டி, அதை அவசர அவசரமாகச் சாப்பிட வேண்டியிருந்தது. காலைவரை யாருமே வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்ற கட்டளைக்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.—யாத் 12:9-11, 22.

இன்று, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது நம்மை எந்தெந்த விதங்களில் பாதுகாக்கிறது?