பாகம் 12
குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
எல்லாரும் அன்பாக நடந்துகொண்டால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். எபேசியர் 5:33
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். இதுதான் கடவுளுடைய சட்டம்.
மனைவியிடம் கணவன் அன்பாக இருக்க வேண்டும், அவளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
கணவனுக்கு மனைவி உதவியாக இருக்க வேண்டும்.
பிள்ளைகள் எப்போதும் அப்பா-அம்மா பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்.
கொலோசெயர் 3:5, 8-10
துரோகம் பண்ணக் கூடாது; அன்பாக இருக்க வேண்டும்; குடும்பத்தில் இருப்பவர்களை கொடுமைப்படுத்தக் கூடாது.கணவன் அவருடைய உடம்பை எப்படி நன்றாக கவனித்துக்கொள்வாரோ அதேமாதிரி மனைவியையும் கவனித்துக்கொள்ள வேண்டும். மனைவி, கணவனிடம் ரொம்ப மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.
கணவனோ மனைவியோ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது தவறு. நிறைய பேரை கல்யாணம் பண்ணுவதும் தவறு.
குடும்பத்தை எப்படிச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை பைபிளைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.