Skip to content

கடவுள் சொன்ன விஷயங்கள்தான் பைபிளில் இருக்கிறதா?

கடவுள் சொன்ன விஷயங்கள்தான் பைபிளில் இருக்கிறதா?

பைபிள் தரும் பதில்

 பைபிளில் என்ன எழுத வேண்டும் என்று கடவுள், தங்களுக்கு சொன்னதாக அதன் எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். சில உதாரணங்களை பாருங்கள்:

  •  தாவீது ராஜா இப்படி சொன்னார்: “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது”—2 சாமுவேல் 23:1, 2.

  •  “சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது:” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னார்.—ஏசாயா 22:15.

  •  ‘கடவுள், இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தியதும், அவர் யோவானுக்கு வெளிப்படுத்தியதுமான விஷயங்கள்’ என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—வெளிப்படுத்துதல் 1:1.