சங்கீதம் 8:1-9

இசைக் குழுவின் தலைவனுக்கு; கித்தீத்* இசையில்; தாவீதின் சங்கீதம். 8  எங்கள் எஜமானாகிய யெகோவாவே, உங்கள் பெயர் பூமியெங்கும் எவ்வளவு மகத்தானது!உங்களுடைய மேன்மையை வானத்துக்கும் மேலாக உயர்த்தியிருக்கிறீர்கள்!*+   உங்களுடைய விரோதிகளை அடக்குவதற்காக,எதிரியையும் பழிவாங்குபவனையும் அடக்குவதற்காக,பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும்+ உங்கள் பலத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.   உங்கள் கைகளால்* படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது,நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது,+   அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோமனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோஅவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+   தேவதூதர்களைவிட* அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள்.மகிமையையும் மேன்மையையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள்.   உங்கள் கைகளால் படைத்தவற்றின்மேல் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள்.+எல்லாவற்றையும் அவனுடைய காலடியின் கீழ் கொண்டுவந்தீர்கள்.   ஆடுகளையும் மாடுகளையும்காட்டு மிருகங்களையும்+   வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும்கடலில் நீந்துகிற மற்ற எல்லா உயிரினங்களையும் அவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தீர்கள்.   எங்கள் எஜமானாகிய யெகோவாவே, உங்கள் பெயர் பூமியெங்கும் எவ்வளவு மகத்தானது!

அடிக்குறிப்புகள்

அல்லது, “உங்களுடைய மேன்மை வானத்துக்கும் மேலாகப் புகழப்படுகிறது!”
நே.மொ., “விரல்களால்.”
வே.வா., “தெய்வீகத்தன்மை உள்ளவர்களைவிட.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா