எரேமியா 45:1-5

45  யூதாவை யோசியாவின் மகனான யோயாக்கீம் ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்,+ எரேமியா தீர்க்கதரிசி சொல்லச் சொல்ல+ நேரியாவின் மகனான பாருக்+ ஒரு புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதினார். அப்போது பாருக்கிடம் எரேமியா,  “பாருக்கே, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உனக்குச் சொல்வது இதுதான்:  ‘நீ புலம்பிக்கொண்டே, “ஐயோ, யெகோவா எனக்கு வேதனைக்குமேல் வேதனை கொடுத்துவிட்டார். குமுறிக் குமுறியே நான் களைத்துப்போய்விட்டேன். எனக்கு நிம்மதியே இல்லை” என்று சொன்னாய்.’  அதனால், கடவுள் உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, இந்த முழு தேசத்திலும் நான் கட்டியதை இடிக்கப்போகிறேன், நான் நட்டு வைத்ததைப் பிடுங்கி எறியப்போகிறேன்.+  நீயோ உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.* அவற்றைத் தேடுவதை நிறுத்து!”’ ‘ஏனென்றால், நான் எல்லா உயிர்களையும் அழிக்கப்போகிறேன்.+ ஆனால், நீ எங்கே போனாலும் நான் உன்னுடைய உயிரைக் காப்பாற்றுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “எதிர்பார்க்கிறாய்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா