ஆதியாகமம் 8:1-22

8  ஆனால், நோவாவுக்கும் அவரோடு பேழையில் இருந்த காட்டு மிருகங்கள், வீட்டு விலங்குகள் எல்லாவற்றுக்கும் கடவுள் கருணை காட்டினார்.+ பின்பு, பூமியில் காற்றை வீச வைத்தார், அப்போது தண்ணீர் குறைய ஆரம்பித்தது.  வானத்திலிருந்த அணைக்கட்டுகளும்* மதகுகளும் மூடப்பட்டன. அதனால், மழை கொட்டுவது நின்றது.+  பூமியிலிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியது. 150 நாட்கள் கழித்து தண்ணீர் மட்டம் குறைந்திருந்தது.  ஏழாம் மாதம் 17-ஆம் நாளில், பேழை அரராத் மலையில் வந்து நின்றது.  பத்தாம் மாதம்வரை தண்ணீர் வடிந்துகொண்டே வந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாளில், மலைகளின் உச்சிகள் தெரிய ஆரம்பித்தன.+  நோவா 40 நாட்களுக்குப் பின்பு பேழையின் ஜன்னலைத்+ திறந்து,  ஓர் அண்டங்காக்கையை வெளியே விட்டார். பூமியிலிருந்த தண்ணீர் வற்றும்வரை அது போவதும் வருவதுமாக இருந்தது.  பின்பு, தண்ணீர் வடிந்துவிட்டதா என்று தெரிந்துகொள்ள நோவா ஒரு புறாவை அனுப்பினார்.  பூமியெங்கும் இன்னும் தண்ணீர் நிறைந்திருந்ததால் புறாவுக்கு உட்கார இடமே கிடைக்கவில்லை.+ அதனால், அது பேழைக்கே திரும்பி வந்தது. நோவா தன் கையை நீட்டி அதைப் பிடித்து பேழைக்குள் எடுத்துக்கொண்டார். 10  இன்னும் ஏழு நாட்கள் கழித்து, அந்தப் புறாவைப் பேழையிலிருந்து மறுபடியும் வெளியே விட்டார். 11  அது பசுமையான ஒலிவ இலையைக் கொத்திக்கொண்டு சாயங்காலத்தில் அவரிடம் திரும்பி வந்தது. அதைப் பார்த்தபோது, பூமியிலிருந்த தண்ணீர் வடிந்துவிட்டது என்பதை நோவா தெரிந்துகொண்டார்.+ 12  ஏழு நாட்கள் கழித்து, அந்தப் புறாவை மறுபடியும் வெளியே விட்டார். ஆனால், அது திரும்பி வரவே இல்லை. 13  நோவாவுக்கு 601 வயதானபோது,+ அந்த வருஷத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் பூமியிலிருந்த தண்ணீர் வடிந்திருந்தது. பேழையின் கூரையை நோவா திறந்து பார்த்தபோது, நிலம் காய்ந்துவருவது தெரிந்தது. 14  இரண்டாம் மாதம் 27-ஆம் நாளில் பூமி நன்றாகக் காய்ந்திருந்தது. 15  அப்போது கடவுள் நோவாவிடம், 16  “நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.+ 17  உன்னோடு இருக்கிற மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும்+ நீ வெளியே கொண்டுவா. அவையெல்லாம் பூமியில் ஏராளமாகப் பெருகட்டும்”+ என்று சொன்னார். 18  அதனால், நோவாவும் அவருடைய மனைவியும் மகன்களும்+ மருமகள்களும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள். 19  எல்லா மிருகங்களும், ஊருகிற எல்லா பிராணிகளும், பறக்கிற எல்லா உயிரினங்களும், நிலத்தில் வாழ்கிற மற்ற எல்லா உயிரினங்களும் அந்தந்த இனத்தின்படி பேழையிலிருந்து வெளியே வந்தன.+ 20  பின்பு, யெகோவாவுக்காக நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ சுத்தமான மிருகங்கள் சிலவற்றையும் சுத்தமான பறவைகள்+ சிலவற்றையும் எடுத்து அதன்மேல் தகன பலி செலுத்தினார்.+ 21  அது யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. அதனால் யெகோவா தன் உள்ளத்தில், “மனுஷர்கள் செய்கிற தவறுக்காக இனி ஒருபோதும் இந்தப் பூமியைச் சபிக்க மாட்டேன்.+ சிறு வயதிலிருந்தே மனுஷர்களுடைய உள்ளத்தின் ஆசைகள் மோசமாக இருக்கின்றன.*+ இப்போது செய்ததுபோல், எல்லா உயிர்களையும் இனி நான் ஒருபோதும் அழிக்க மாட்டேன்.+ 22  பூமியில் இனி விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், பகலும் இரவும் எப்போதுமே இருக்கும்”+ என்று சொல்லிக்கொண்டார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மகா ஆழத்தின் ஊற்றுகளும்.”
வே.வா., “உள்ளம் கெட்ட காரியங்களின் பக்கமாகச் சாய்கிறது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா