கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் பூமியிலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். அந்த அரசாங்கத்தின்மேல் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?
இயேசு பூமியில் ஊழியம் செய்த காலம் முழுக்க, வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார். அந்த ராஜ்யம் வர வேண்டும் என்றுதான் பல நூற்றாண்டுகளாக அவருடைய சீஷர்கள் ஜெபம் செய்து வந்திருக்கிறார்கள்.