யோவான் எழுதியது 4:1-54
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

பைபிள் காலங்களில், அறுவடை செய்தவர்கள் சிலசமயங்களில் தானியப் பயிர்களை நிலத்திலிருந்து வெறுமனே பிடுங்கினார்கள். ஆனால், பெரும்பாலான சமயங்களில் அவற்றை அரிவாளால் அறுத்தெடுத்தார்கள். (மாற் 4:29) வயலில் இருந்த முற்றிய கதிர்களை அறுவடை செய்தவர்கள் தொகுதி தொகுதியாக சேர்ந்துதான் வேலை செய்தார்கள். (ரூ 2:3; 2ரா 4:18) சாலொமோன் ராஜா, ஓசியா தீர்க்கதரிசி, அப்போஸ்தலன் பவுல் போன்ற பைபிள் எழுத்தாளர்கள் பலர், முக்கியமான உண்மைகளைப் புரியவைப்பதற்கு அறுவடை வேலையை உவமையாகப் பயன்படுத்தினார்கள். (நீதி 22:8; ஓசி 8:7; கலா 6:7-9) எல்லாருக்கும் தெரிந்த இந்த வேலையை இயேசுவும் உவமையாகப் பயன்படுத்தினார்; சீஷராக்கும் வேலையில் தேவதூதர்களுக்கும் தன் சீஷர்களுக்கும் பங்கு இருக்கும் என்பதை அந்த உவமையில் எடுத்துக்காட்டினார்.—மத் 13:24-30, 39; யோவா 4:35-38.