யோவான் எழுதியது 17:1-26

17  இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+  ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தந்திருக்கிற எல்லா மனுஷர்களுக்கும்+ அவர் முடிவில்லாத வாழ்வைக்+ கொடுப்பதற்காக அவர்கள் எல்லார்மேலும் அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள்.+  ஒரே உண்மையான கடவுளாகிய+ உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்+ பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும்.  நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து+ பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்.+  அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து+ இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள்.  நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தியிருக்கிறேன்.+ இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள், இவர்களை என்னிடம் தந்தீர்கள், இவர்கள் உங்களுடைய வார்த்தையின்படி நடந்திருக்கிறார்கள்.  நீங்கள் எனக்குத் தந்த எல்லாமே உங்களிடமிருந்து வந்தவை என்று இப்போது இவர்கள் தெரிந்துகொண்டார்கள்.  ஏனென்றால், நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்;+ இவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் உங்களுடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள்,+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை நம்புகிறார்கள்.+  இவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உலகத்துக்காக அல்ல, நீங்கள் எனக்குத் தந்தவர்களுக்காகவே வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள். 10  எனக்குச் சொந்தமானவையெல்லாம் உங்களுக்குச் சொந்தமானவை, உங்களுக்குச் சொந்தமானவையெல்லாம் எனக்குச் சொந்தமானவை.+ இவர்களால் நான் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். 11  இனியும் நான் இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்,+ நான் உங்களிடம் வருகிறேன். பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது* போல இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள்.+ 12  நான் இவர்களோடு இருந்தபோது, நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைப் பாதுகாத்தும் காப்பாற்றியும் வந்தேன்.+ வேதவசனம் நிறைவேறும்படி,+ அழிவின் மகனைத்+ தவிர இவர்களில் ஒருவர்கூட அழிந்துபோகவில்லை.+ 13  ஆனால், இப்போது நான் உங்களிடம் வரப்போகிறேன்; என்னுடைய சந்தோஷத்தை இவர்களும் நிறைவாய் அனுபவிப்பதற்காக+ நான் இந்த உலகத்தில் இருக்கும்போதே இவற்றைச் சொல்கிறேன். 14  உங்களுடைய வார்த்தையை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+ 15  நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்கவில்லை, பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.+ 16  நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே+ இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+ 17  சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்;*+ உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.+ 18  நீங்கள் என்னை இந்த உலகத்துக்குள் அனுப்பியது போலவே நானும் இவர்களை இந்த உலகத்துக்குள் அனுப்பினேன்.+ 19  சத்தியத்தின் மூலம் இவர்கள் புனிதமாகும்படி, இவர்களுக்காக என்னையே புனிதப்படுத்திக்கொள்கிறேன். 20  இவர்களுக்காக மட்டுமல்ல, இவர்களுடைய வார்த்தையைக் கேட்டு என்மேல் விசுவாசம் வைப்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். 21  இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.+ தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை அப்போது இந்த உலகம் நம்பும். 22  நாம் ஒன்றாயிருப்பது போலவே அவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குத் தந்திருக்கிறேன். 23  அவர்கள் முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்காக, நான் அவர்களோடும் நீங்கள் என்னோடும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்போது, நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதையும், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவது போலவே அவர்கள்மேலும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும் இந்த உலகம் தெரிந்துகொள்ளும். 24  தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு நீங்கள் என்மேல் அன்பு காட்டியதால் எனக்கு மகிமை தந்தீர்கள்;+ நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.+ 25  நீதியுள்ள தகப்பனே, இந்த உலகத்துக்கு உங்களைத் தெரியாது.+ ஆனால், எனக்கு உங்களைத் தெரியும்;+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை இவர்களும் தெரிந்துகொண்டார்கள். 26  நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்+ இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒற்றுமையாக இருப்பது.”
வே.வா., “தனியாகப் பிரித்து வையுங்கள்; பரிசுத்தமாக்குங்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா