யோவான் 12:1-50
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

கழுதை, கடினமான குளம்புகளைக் கொண்ட ஒரு விலங்கு. அது குதிரையின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், குதிரையைவிட உருவத்தில் சிறியது, அதைவிடக் குட்டையான பிடரிமயிரையும், நீளமான காதுகளையும், வாலின் முனைப்பகுதியில் மட்டும் குட்டையான முடியையும் கொண்டது. கழுதை பொதுவாக முட்டாள்தனத்துக்கும் பிடிவாதத்துக்கும் உதாரணமாகச் சொல்லப்படுகிறது; ஆனாலும், அது குதிரையைவிடப் புத்திசாலியான விலங்கு, பெரும்பாலும் பொறுமையாக இருக்கும் விலங்கு. இஸ்ரவேலில் ஆண்களும், பெண்களும், பிரபலமானவர்களும்கூட கழுதையில் சவாரி செய்தார்கள். (யோசு 15:18; நியா 5:10; 10:3, 4; 12:14; 1சா 25:42) தாவீதின் மகனாகிய சாலொமோன், ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுவதற்குப் போனபோது தன்னுடைய அப்பாவுக்குச் சொந்தமான ஒரு பெட்டைக் கழுதையில்தான் சவாரி செய்தார்; அது பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த கோவேறு கழுதை. (1ரா 1:33-40) அதனால், பெரிய சாலொமோனாகிய இயேசு ஒரு குதிரைமேல் சவாரி செய்யாமல் கழுதைக்குட்டிமேல் சவாரி செய்தது மிகப் பொருத்தமாக இருந்தது; அது சக 9:9-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகவும் இருந்தது.