சங்கீதம் 107:1-43

(சங்கீதம் 107-150) 107  யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+   இதை யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் சொல்லட்டும்.அவர்களை எதிரியிடமிருந்து அவர் மீட்டுக்கொண்டார்.+   மற்ற தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்த்தார்.+கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கூட்டிச்சேர்த்தார்.+   வெறுமையான வனாந்தரத்தில் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.குடியிருப்பதற்கான நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடினார்கள்.   பசியில் வாடினார்கள், தாகத்தில் தவித்தார்கள்.சோர்வில் சுருண்டு விழும் நிலையில் இருந்தார்கள்.   வேதனை தாங்காமல் யெகோவாவிடம் கதறிக்கொண்டே இருந்தார்கள்.+அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார்.+   சரியான வழியில் அவர்களை நடத்திக்கொண்டு போனார்.+அவர்கள் குடியிருப்பதற்கான நகரத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+   மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்+மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.+   அவர் தண்ணீரைக் கொடுத்து தாகத்தைத் தீர்த்தார்.நல்ல நல்ல உணவைக் கொடுத்து பசியைப் போக்கினார்.+ 10  சிலர் பயங்கர இருட்டில் வாழ்ந்தார்கள்.விலங்குகள் மாட்டப்பட்டு, கைதிகளாக அவதிப்பட்டார்கள். 11  ஏனென்றால், கடவுளுடைய வார்த்தையை அவர்கள் மீறினார்கள்.உன்னதமான கடவுளுடைய அறிவுரையை அவமதித்தார்கள்.+ 12  அதனால், பாடுகளை அனுபவிக்க வைப்பதன் மூலம்அவர்களுடைய இதயத்திலிருந்த ஆணவத்தைக் கடவுள் அடக்கினார்.+அவர்கள் தடுமாறி விழுந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்ய யாருமே இருக்கவில்லை. 13  வேதனையில் தவித்தபோது உதவிக்காக யெகோவாவைக் கூப்பிட்டார்கள்.அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார். 14  பயங்கரமான இருட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார்.அவர்களுடைய விலங்குகளை உடைத்துப்போட்டார்.+ 15  மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,+மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும். 16  ஏனென்றால், செம்புக் கதவுகளை அவர் நொறுக்கிப்போட்டார்.இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டார்.+ 17  அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டார்கள்.+தாங்கள் செய்த குற்றங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் கஷ்டத்தை அனுபவித்தார்கள்.+ 18  அவர்களுக்கு எதையுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.அவர்கள் மரண வாசலை நெருங்கினார்கள். 19  வேதனையில் தவித்தபோது உதவிக்காக யெகோவாவைக் கூப்பிட்டார்கள்.அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார். 20  அவர் தன்னுடைய வார்த்தையை அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்.+அவர்கள் விழுந்து கிடந்த குழிகளிலிருந்து அவர்களைத் தூக்கிவிட்டார். 21  மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும். 22  அவர்கள் நன்றிப் பலிகளைச் செலுத்தட்டும்.+சந்தோஷம் பொங்க அவருடைய செயல்களை அறிவிக்கட்டும். 23  கப்பலில் பயணம் செய்கிறவர்களும்,பரந்து விரிந்த கடலில் வியாபாரம் செய்கிறவர்களும்,+ 24  யெகோவாவின் செயல்களைப் பார்த்திருக்கிறார்கள்.ஆழ்கடலில் அவர் செய்திருக்கிற அதிசயங்களைப் பார்த்திருக்கிறார்கள்.+ 25  அவர் ஒரு வார்த்தை சொன்னதும் எப்படிப் புயல் அடிக்கிறதென்றும்,+கடல் அலைகளை அது எப்படிப் பொங்கியெழ வைக்கிறதென்றும் பார்த்திருக்கிறார்கள். 26  அலைகள் அவர்களை மேலே வானத்துக்கும்,கீழே ஆழ்கடலுக்கும் அலைக்கழிக்கின்றன. வரப்போகிற ஆபத்தை நினைத்து அவர்கள் வெலவெலத்துப்போகிறார்கள். 27  குடிகாரர்கள்போல் தள்ளாடுகிறார்கள், தடுமாறுகிறார்கள்.அவர்களுடைய திறமை எதுவுமே அவர்களுக்குக் கைகொடுப்பதில்லை.+ 28  பின்பு, வேதனை தாங்காமல் யெகோவாவிடம் கதறுகிறார்கள்.+அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றுகிறார். 29  புயல்காற்றை அவர் அடக்குகிறார்.அப்போது, கடல் அலைகள் அமைதியாகின்றன.+ 30  எல்லாம் அடங்கியதும் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.அவர்கள் போக விரும்பும் துறைமுகத்துக்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். 31  மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.+ 32  மக்களின் சபையில் அவரை மெச்சிப் பேசட்டும்.+பெரியோர்களின் கூட்டத்தில் அவரைப் புகழ்ந்து பேசட்டும். 33  ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+ 34  வளமான நிலத்தைப் பயனில்லாத உப்பு நிலமாக்குகிறார்.+ஏனென்றால், அங்கே குடியிருக்கிறவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள். 35  அவர் பாலைவனத்தை நாணல்கள் நிறைந்த குளமாக மாற்றுகிறார்.வறண்ட நிலத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக மாற்றுகிறார்.+ 36  பசியில் வாடுகிறவர்களை அங்கே வாழ வைக்கிறார்.+அவர்கள் குடியிருக்க ஒரு நகரத்தைக் கட்டும்படி செய்கிறார்.+ 37  அவர்கள் வயல்களில் விதைக்கிறார்கள், திராட்சைத் தோட்டங்களைப் போடுகிறார்கள்.+அவை அமோக விளைச்சலைத் தருகின்றன.+ 38  அவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார், அவர்கள் ஏராளமாகப் பெருகுகிறார்கள்.அவர்களுடைய கால்நடைகளும் குறையாதபடி அவர் பார்த்துக்கொள்கிறார்.+ 39  ஆனால், திரும்பவும் அவர்களுடைய எண்ணிக்கை குறைகிறது, அவமானம் கூடுகிறது.ஏனென்றால், அவர்கள் கொடுமையையும் துன்பத்தையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். 40  செல்வாக்கு உள்ளவர்களுக்கு மிகுந்த அவமானம் வரும்படி செய்கிறார்.பாதையில்லாத பொட்டல் காடுகளில் அவர்களைத் திரிய வைக்கிறார்.+ 41  ஆனால், அடக்கி ஒடுக்கப்படும் ஏழைகளைப் பாதுகாக்கிறார்.*+அவர்களுடைய குடும்பங்களை மந்தைபோல் பெருக வைக்கிறார். 42  நேர்மையானவர்கள் இதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.+ஆனால், அக்கிரமக்காரர்கள் தங்களுடைய வாயை மூடிக்கொள்கிறார்கள்.+ 43  ஞானமாக நடக்கிற எல்லாரும் இவற்றைக் கவனிப்பார்கள்.+மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார் என்று நன்றாக யோசித்துப் பார்ப்பார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உயரத்தில் தூக்கி வைக்கிறார்.” அதாவது, கைக்கு எட்டாத தூரத்தில் வைக்கிறார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா