சகரியா 11:1-17

11  “லீபனோனே, உன் கதவுகளைத் திற!உன் தேவதாரு மரங்களை நெருப்பு எரிக்கட்டும்.   ஆபால் மரங்களே, அழுது புலம்புங்கள்! தேவதாரு மரங்களெல்லாம் அழிந்துவிட்டதே!உயர்ந்தோங்கி நின்ற மரங்களெல்லாம் வெட்டிச் சாய்க்கப்பட்டதே! பாசானின் கருவாலி மரங்களே, அழுது புலம்புங்கள்!அடர்ந்த காடு பாழாய்ப்போனதே!   மேய்ப்பர்களின் கதறலைக் கேளுங்கள்.அவர்களுடைய வளமான மேய்ச்சல் நிலங்களெல்லாம் நாசமாக்கப்பட்டதே! இளம் சிங்கங்களின் கர்ஜனையைக் கேளுங்கள்.யோர்தானை ஒட்டியுள்ள அடர்ந்த புதர்க் காடுகளெல்லாம் பாழாக்கப்பட்டதே!  என் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘வெட்டுவதற்காகவே வைக்கப்பட்டுள்ள ஆடுகளை நீ மேய்க்க வேண்டும்.+  அந்த ஆடுகளை விலைக்கு வாங்குகிறவர்கள் அவற்றை வெட்டினாலும்,+ குற்றவாளிகள் ஆவதில்லை. அவற்றை விற்பவர்கள்,+ “நான் பணக்காரன் ஆகப்போகிறேன். இதற்கு யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்!” என்கிறார்கள். மேய்ப்பர்களுக்கு அந்த ஆடுகள்மேல் கரிசனையே இல்லை.’+  யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘இந்தத் தேசத்து ஜனங்களுக்கு இனி நான் கரிசனை காட்ட மாட்டேன். ஒவ்வொருவனும் அடுத்தவனின் கையிலும் அரசனின் கையிலும் சிக்கித் தவிக்கும்படி செய்வேன். அவர்கள் தேசத்தை அழிப்பார்கள். அவர்களிடமிருந்து நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்.’”  வெட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள ஆடுகளே, நான் உங்களை மேய்க்க ஆரம்பித்தேன்.+ அவதிப்படுகிற ஆடுகளே, உங்களுக்காகத்தான் அதைச் செய்தேன். அதனால், நான் இரண்டு கோல்களை எடுத்தேன். ஒரு கோலுக்கு இனிமை என்றும், மற்றொரு கோலுக்கு ஒற்றுமை என்றும் பெயர் வைத்தேன்.+ பின்பு, மந்தையை மேய்க்க ஆரம்பித்தேன்.  ஒரு மாதத்தில் மூன்று மேய்ப்பர்களை வேலையிலிருந்து நீக்கினேன். ஏனென்றால், அதற்குமேல் அவர்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அவர்களும் என்னை வெறுத்தார்கள்.  அதனால் நான், “இனி உங்களை மேய்க்க மாட்டேன். சாகிறவர்கள் சாகட்டும், அழிகிறவர்கள் அழியட்டும். மிச்சமிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுபோடட்டும்” என்று சொன்னேன். 10  பின்பு, எல்லா ஜனங்களோடும் நான் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக, இனிமை என்ற என் கோலை+ எடுத்து முறித்தேன். 11  அன்றைக்கு அந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டது. அவதிப்பட்ட ஆடுகள் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தன. அது யெகோவாவின் செய்தி என்பதைப் புரிந்துகொண்டன. 12  பின்பு நான், “நீங்கள் விரும்பினால் எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையென்றால், வேண்டாம்” என்று சொன்னேன். அப்போது, அவர்கள் எனக்கு 30 வெள்ளிக் காசுகளைக் கூலியாகக் கொடுத்தார்கள்.+ 13  அப்போது யெகோவா என்னிடம், “அவர்களுக்கு என்மேல் எவ்வளவு மதிப்பு!+ அதைப் பொக்கிஷ அறையில் தூக்கியெறி!” என்று சொன்னார். அதனால், நான் அந்த 30 வெள்ளிக் காசுகளை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறையில் எறிந்துவிட்டேன்.+ 14  பின்பு, யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர பந்தத்தைத் துண்டிப்பதற்காக+ ஒற்றுமை என்ற இரண்டாவது கோலை+ எடுத்து முறித்தேன். 15  யெகோவா என்னிடம், “எதற்குமே லாயக்கில்லாத ஒரு மேய்ப்பனின்+ ஆயுதங்களை எடு. 16  இந்தத் தேசத்தை மேய்க்க ஒரு மேய்ப்பனை நான் அனுமதிப்பேன். சாகக்கிடக்கிற ஆடுகளை அவன் காப்பாற்ற மாட்டான்.+ ஆட்டுக்குட்டிகளைத் தேடிப்போக மாட்டான். காயப்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போட மாட்டான்.+ ஆரோக்கியமான ஆடுகளுக்கு உணவு கொடுக்க மாட்டான். அதற்குப் பதிலாக, கொழுத்த ஆடுகளின் இறைச்சியை விழுங்குவான்.+ ஆடுகளின் காலில் உள்ள குளம்புகளைப் பிய்த்தெடுப்பான்.+ 17  மந்தையைத் தவிக்கவிடும் உதவாக்கரை மேய்ப்பனுக்குக்+ கேடுதான் வரும்!+ அவனுடைய கையும் வலது கண்ணும் ஒரு வாளால் தாக்கப்படும். அவனுடைய கை விளங்காமல் போய்விடும்.அவனுடைய கண் குருடாகிவிடும்” என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா