Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் தரும் பதில்கள்

பைபிள் தரும் பதில்கள்

கடவுள்மேல அன்பு காட்ட பிள்ளைங்களுக்கு எப்படி சொல்லித்தரலாம்?

கடவுள் படைச்ச விஷயங்கள காட்டி பிள்ளைங்களுக்கு அவரை பத்தி சொல்லிக்கொடுங்க

முதல்ல, கடவுள் இருக்கார்னு பிள்ளைங்க நம்பனும். நம்ம மேல அவருக்கு அன்பு இருக்குனு புரிஞ்சிக்கனும். (1 யோவான் 4:8) அவரை பத்தி தெரிஞ்சிக்கனும். ‘கடவுள் ஏன் நம்மல படைச்சார்? நாம ஏன் கஷ்டப்படுறோம்? கஷ்டம் இல்லாத வாழ்க்கை வருமா?’ இதையெல்லாம் பிள்ளைங்களுக்கு சொல்லிக்கொடுங்க. அப்பதான் கடவுள்மேல அவங்க அன்பு காட்டுவாங்க.பிலிப்பியர் 1:9-ஐ படிங்க.

நீங்க கடவுள்மேல அன்பு காட்டுங்க. உங்கள பார்த்து பிள்ளைங்களும் கடவுள்மேல அன்பு காட்டுவாங்க.உபாகமம் 6:5-7; நீதிமொழிகள் 22:6-ஐ படிங்க.

பிள்ளைங்க புரிஞ்சிக்கிற மாதிரி எப்படி சொல்லித்தரலாம்?

பிள்ளைங்களுக்கு பைபிள்ல இருந்து சொல்லிக்கொடுங்க. ஏன்னா, அது கடவுள் தந்த புத்தகம். அதிலிருந்து சொல்லிக்கொடுத்தா, கடவுளே அவங்ககிட்ட பேசுற மாதிரி இருக்கும். (எபிரெயர் 4:12) இயேசுவும் வசனங்கள்ல இருந்து மக்களுக்கு விளக்கி சொன்னார். அவங்க புரிஞ்சிக்கிற மாதிரி சொல்லிக்கொடுத்தார். அதுக்கு நிறைய கேள்விகள கேட்டார். அவங்க சொல்றதையும் கவனமா கேட்டார். இயேசு மாதிரியே சொல்லிக்கொடுத்தா, பிள்ளைங்க நல்லா புரிஞ்சிப்பாங்க.லூக்கா 24:15-19, 27, 32-ஐ படிங்க.

மக்கள கடவுள் எப்படி கவனிச்சிக்கிட்டார்னு பைபிள்ல இருந்து சொல்லிக்கொடுங்க. அப்போ கடவுள்மேல இன்னும் அன்பு காட்டுவாங்க. www.jw.org வெப்சைட்ல, பிள்ளைங்களுக்கு கடவுள பத்தி சொல்லிக்கொடுக்க நிறைய புத்தகங்கள் இருக்கு.2 தீமோத்தேயு 3:16-ஐ படிங்க. (w14-E 12/01)