யெகோவாவின் சாட்சிகள்எங்களைப் பற்றி
நாங்கள் பல்வேறு இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள்; என்றாலும், நாங்கள் ஒரே நோக்கத்துடன் இருப்பதால் ஒற்றுமையாய் இருக்கிறோம். அதற்கும்மேலாக, எல்லாவற்றையும் படைத்த, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளாகிய யெகோவாவுக்கு கனம் சேர்க்க விரும்புகிறோம். இயேசு கிறிஸ்துவை பின்பற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்; அதோடு, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம். பைபிளைப் பற்றியும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவ நாங்கள் ஒவ்வொருவரும் தவறாமல் நேரம் செலவிடுகிறோம். யெகோவா தேவனைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் சாட்சிகொடுப்பதால் அதாவது பேசுவதால் நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகிறோம்.
எங்கள் வெப் சைட்டை அலசி ஆராயுங்கள். ஆன்லைனில் பைபிளை வாசியுங்கள். எங்களைப் பற்றியும் எங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.


